இலங்கையின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக் கழகம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ , வடக்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளிலும் பிற்பகல் 1:00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளின் போது உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.