இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிரி வோல்ட் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.அப்போதுசுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் ,பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
Trending
- மோடிக்கு அழைப்பு விடுத்த கனடா பிரதமர்
- ஏப்ரல் 2026இல் பொதுத்தேர்தல் முகமது யூனுஸ் அறிவிப்பு
- கரையும் பிளாஸ்ரிக் ஜப்பான் சாதனை
- பிலிப்பைன்ஸ் குடிமக்களை மணந்த இலங்கையர்களுக்கு வதிவிட விஸா
- 10 ரூபாவுக்கு ஆசைப்பட்டவருக்கு 500,000 ரூபா அபராதம்
- அல்லு அர்ஜுன் மாதிரி விராட் கோலியை கைது செய்ய முடியாது
- முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
- 3,000 வாகனங்களுடன் எரியும் கப்பல்