பாலிக்கு கிழக்கே உள்ள சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி, செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணிக்கு வெடித்ததாக எரிமலையியல் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரம்மாண்டமான சாம்பல் வானத்தில் கக்கியதால், பாலிக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
எரிமலை வெடிப்புக்குப் பதிலளிக்கும் விதமாக , இந்தோனேசியாவின் பேரிடர் எச்சரிக்கை அளவை நான்கு அடுக்கு அமைப்பின் மிக உயர்ந்த நிலைக்கு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.