புது தில்லியில் உள்ள இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக ஆராய்ச்சி , பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த வார இறுதியில் இந்தியாவுக்குப் புறப்படும் 24 பங்கேற்பாளர்களைக் கொண்ட தொடக்கக் குழுவை இந்தியாவின் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சந்தித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை பாராளுமன்றத்தின் 4 அதிகாரிகள் அடங்கிய மாண்புமிகு துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவை இன்று இந்திய மாளிகையில் உயர் ஸ்தானிகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சி 2025 மே 26-30 வரை ஒரு வாரம் நீடிக்கும். சட்டமன்ற,பட்ஜெட் செயல்முறைகள், பாராளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய விஷயங்களில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் கூறுகள் இதில் அடங்கும்.
Trending
- போதைவஸ்த்து அற்ற எதிர்காலத்துக்காக நடைபயணம்
- யாழ் – நீதிமன்ற அருகில் வைத்து யுவதி கடத்தல்
- வடமராட்சி கிழக்கில் நிதி சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு
- சர்வதேச விருது பெற்ற இலங்கையரான செல்வின் தாஸ்
- இந்தியாவுக்குச் செல்லும் குழுவை சந்தோஷ் ஜா சந்தித்தார்
- கந்தசுவாமி ஆலயம் முன் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் பெயர் பலகை நீக்கம்
- மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு
- இலங்கையின் 53ஆவது குடியரசு தினம் இன்று