புது தில்லியில் உள்ள இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக ஆராய்ச்சி , பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த வார இறுதியில் இந்தியாவுக்குப் புறப்படும் 24 பங்கேற்பாளர்களைக் கொண்ட தொடக்கக் குழுவை இந்தியாவின் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சந்தித்தார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை பாராளுமன்றத்தின் 4 அதிகாரிகள் அடங்கிய மாண்புமிகு துணை சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவை இன்று இந்திய மாளிகையில் உயர் ஸ்தானிகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சி 2025 மே 26-30 வரை ஒரு வாரம் நீடிக்கும். சட்டமன்ற,பட்ஜெட் செயல்முறைகள், பாராளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய விஷயங்களில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் கூறுகள் இதில் அடங்கும்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.