இந்தியா எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து, திருகோணமலை கடற்பரப்பில் பாகிஸ்தானுடன் நடத்த திட்டமிட்டிருந்த கடற்படைப் பயிற்சியை இலங்கை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பாகிஸ்தான் ஆகியவற்றின் கடற்படைகளுக்கு இடையிலான வழக்கமான கடற்படைப் பயிற்சிக்கு இந்தியா தனது அச்சங்களை இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்ததை அடுத்து இரத்து செய்யப்பட்டது.
இலங்கை அல்லது பாகிஸ்தான் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றாலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே இரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
திருகோணமலையின் எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்தியா இலங்கையை தீவிரமாக ஆதரித்து வருகிறது.
பிரதமர் மோடியின் சமீபத்திய பயணத்தின் போது, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், திருகோணமலையை பிராந்திய எரிசக்தி மையமாக மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன கையெழுத்திட்டன.