ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் 21 வயதான மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலையில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கடந்த ஜூன் 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன உள்ளிட்ட மூவர் சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக்களும் ஜூன் 24 ஆம் திகதி நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்கழு அதிகாரி ஒருவரை மிரட்டிய சம்பவம் தொடர்பில் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.