Zee தமிழ் சரிகமப சீசன் 5 ஆரம்பமாகிவிட்டது. உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்கள் இதனை மிகுந்த ஆர்வத்திடன் பார்க்கிறார்கள். Zee தமிழ் சரிகமப, விஜய் டிவியின் சுப்பர் சிங்கர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் இலங்கைப் பாடகர்களுக்கு முகியத்துவம் கொடுக்கின்றன.
பிரசாந்த சுவிஸில் இருந்து வந்திருக்கிறேன் என்ற அறிமுகத்துடன் மேடையில் தோன்றிய இளைஞன் தன்னைப்பற்றிச் சொல்லத் தொடங்கியதும் அரங்கம் நிசப்தமானது.
இழத்தில் இருந்து சுவிஸுக்கு அகதியாகச் சென்ற அவர் நாடற்றவராக இருக்கிறார்.
அவருக்கு பாஸ்போர்ட் இல்லை. விஷேஷ அனுமதியில் போட்டியில் கலந்து கொள்கிறார். தெரிவானாலும் இறுதிவரை பங்கு பற்ற முடியசது, ஜூன் 3 ஆம் திகதிக்கு முன்ன்ர் சுவிஸுக்குச் சென்று விட வேண்டும். இல்லையென்றால் சுவிஸ் ஏற்றுக் கொள்ளாதாம்.
பிரசாந்த் அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி உள்ளார்.
இது ஒரு புதிய பிரச்சனை இப்படியான பிரச்சனையை இது வரை அரியவில்லை என அங்கிருந்த அனைவரும் கருத்துத் தெரிவித்தனர்.
பிரசாந்துடன் மேலும் இரண்டு இலங்கையர்கள் Zee தமிழ் சரிகமப சீசன் 5 க்குத் தெரிவாகி உள்ளனர்.
அம்பாறை, விநாயகபுரத்தைச் சேர்ந்த சபேசன்,. இவர் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் முன்னால் மாணவன், தற்போது இலங்கை சாரங்கா இசைக்குழுவின் பிரபல பாடகர்.
இன்னொருவர் யாழ்ப்பானத்திச் சேர்ந்த தரங்கினி பாலமுருகன். இவர் பிரபல நாதஸ்வர வித்துவான் பாலமுருகனின் மகள். குமரனின் மருமகள், வி.கே. கானமூர்த்தியின் பேர்த்தியாவார்.

