தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் “உக்ரைன் பகுதி”யிலிருந்து நடந்த “பாரிய சைபர் தாக்குதல்” தான் காரணம் என
X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், க்கூறினார்.
திங்கட்கிழமை உலகெங்கும் நாள் முழுவதும் X தளம் மீண்டும் மீண்டும் செயலிழந்தது. தொடர் மீட்டெடுப்பும், செயலிழப்புமாகவே இருந்தது.
“என்ன நடந்தது என்பது எங்களுக்கு சரியாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் பகுதியில் இருந்து வரும் ஐபி முகவரிகளைக் கொண்ட, எக்ஸ் அமைப்பை செயலிழக்கச் செய்ய நோக்கத்தோடு ஒரு பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது,” என்று ஃபாக்ஸ் நியூஸ் உரையாடலின் போது மஸ்க் கூறினார்.
ஒரு பொது டெலிகிராம் சேனலின்படி, பாலஸ்தீன ஆதரவு ஹேக்கர் குழுவான டார்க் ஸ்டோர்ம் டீம், X இல் நடந்த DDoS தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைத் தொடர்ந்து, காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களை குறிவைப்பதில் இந்த குழு பெயர் பெற்றது.
Trending
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி