Monday, December 22, 2025 4:05 pm
இலங்கைக்கான அமெரிக்க தூதர் உட்பட சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திரும்ப அழைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இலங்கை உட்பட 29 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் மற்றும் மூத்த இராஜதந்திர அதிகாரிகளின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடையும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்திருந்தது. இவர்கள் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை முழுமையாக ஆதரிப்பவர்களுடன் அமெரிக்க இராஜதந்திர கொள்கைகளை செயல்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 ஆப்பிரிக்க நாடுகள், ஆறு ஆசிய நாடுகள், நான்கு ஐரோப்பிய நாடுகள், இரண்டு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இரண்டு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகளை டிரம்ப் நிர்வாகம் திரும்ப அழைத்துள்ளது.
எந்தவொரு நிர்வாகத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் வழக்கமான நடைமுறை என அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

