Monday, December 22, 2025 3:26 pm
தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பி தையிட்டி விகாரையை அகற்றுமாறு போராட்டத்தின்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தையிட்டியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டமை மற்றும் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தமை போன்ற செயல்களுக்கு மாணவர்கள் இதன்போது கண்டனம் தெரிவித்தனர்.


