தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த இயந்திர மனிதன் பணியமர்த்தப்பட்டுள்ளது.இயந்திர மனிதனில் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகு (AI) படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும். பின்னர் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும்.