கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதால் வடகொரியா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடகொரியா – தென்கொரியா நாடுகள் இடையே கொரியா பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே பிரச்சினை இருந்து வருகிறது. வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் அன், தென்கொரியாவை நெருக்கடி கொடுத்து வருகிரார். சில மாதங்களுக்கு முன்பாக பறக்கும் பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென்கொரியாவுக்குள் விட்டார்.
தென்கொரியாவும் வடகொரியாவை சமாளிப்பதற்காக அடிக்கடி அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு இராணுவ பயிற்சியை எடுத்து வருகிறது. அவர்களை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா தொடர்ந்து கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்துகிறது.
இந்நிலையில்தான் சமீபத்தில் அமெரிக்காவின் விமானங்கள் தாங்கிய போர்க்கப்பல் ஒன்று கொரிய தீபகற்ப பகுதியில் நுழைந்துள்ளது. இது வடகொரியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நேரடியாகவே அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக பேசியுள்ள கிம் ஜாங் அன்னின் சகோதரி ஜிம் யோ ஜாங், அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.
பொதுவாக இதுபோல அமெரிக்காவுடன் முட்டும்போதெல்லாம் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை கடலில் ஏவி மிரட்டிக் காட்டுவது வழக்கம் என்பதால் சில நாட்களில் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Trending
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின