இந்திய கடற்படைக் கப்பலான குத்தார், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகுப்பு கொர்வெட், மூன்று நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை [3] கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் அதிகாரிகளின் இசையுடன் கப்பல் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டது. வந்தடைந்ததும், கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா, மேற்கு கடற்படைப் பகுதி தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வாவை சந்தித்தார்.
இந்திய கடற்படைக் கப்பலான குத்தாரின் வருகை, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் கப்பல் மார்ச் 06, ஆம் திகதி புறப்பட உள்ளது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை