ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகக் கூறப்படும் வட மாகாணத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 200 பேரின் நிலைமையை உடனடியாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பாராளுமன்றத்தில் வினவிய போது அவர்கள் தாமாக முன்வந்து ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டதாக அமைச்சர் விஜித ஹேரத் கூறியதாகவும் அந்தப் பதிலில் தனக்குத் திருப்தி இல்லை என ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் தற்போது 554 இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும், 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அந்த புள்ளிவிவரங்களின் துல்லியம் குறித்து நிச்சயமற்ற தன்மை உள்ளது, அரசாங்கம் தலையிட்டு சரியான புள்ளிவிவரங்களை பொதுமக்களுக்கு வழங்குமாறு ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்த குடும்பங்களுக்கு சரியான தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Trending
- காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல், மீண்டும் போர் பதற்றம்!
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்