இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை [4]இரவு நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,11 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை காலை ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் தேசியானா கார்த்திகா பஹாரி உறுதிப்படுத்தினார். நள்ளிரவுக்கு சற்று முன்பு போகோர் ரீஜென்சியில் உள்ள சியாவி டோல் கேட் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி பிரேக் செயலிழந்ததால், டோல்கேட்டில் இரண்டு கார்கள் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி இரவு 11:30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் போகோர் ரீஜென்சி காவல்துறைத் தலைவர் எகோ பிரசெட்யோ தெரிவித்தார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை