மது , சிகரெட் பாவனைக்காக நாளொன்றுக்கு 1,210 மில்லியன் ரூபாவை இலங்கையர் செலவளிப்பதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் 237 பில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது. அதேவேளையில் 2022 இல் வரி வருமானம் 165.2 பில்லியன் ரூபாஎன பதிவாகியுள்ளது.
ஆண்டுதோறும் மது அருந்துவதால் 15,000 பேரும், சிகரெட் பாவனையால் 20,000 பேரும் மரணமாகிறார்கள்.
இலங்கையில் தொற்றாத நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு காணப்படுவதாகவும், இதற்கு மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையே முக்கிய காரணங்களாகும் என ADIC சுட்டிக்காட்டியுள்ளது.
2023 இல் 20% வரி அதிகரிப்பைத் தொடர்ந்து, மதுவின் நுகர்வு 8.3 மில்லியன் லீற்றர் மதுபானம் குறைந்துள்ளது, அதேவேளை வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
சிகரெட் விற்பனை மூலம் வரி வருவாய் 7.7 பில்லியன், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என ADIC தெரிவித்துள்ளது.
Trending
- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்