Sunday, July 26, 2026 6:50 pm
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகள் மீதான பதிலடித் தாக்குதல்களை ஞாயிற்றுக்கிழமை இடைநிறுத்தியதாக ஈரான் கூறியது. மேலும், குறைந்து வரும் ஆயுதங்கள் குறித்த கவலைகள், போரை மேலும் தீவிரப்படுத்தும் திட்டங்களைத் தடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“இந்தத் தாக்குதல்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தொடர்ந்தன, ஆனால் கடந்த இரண்டு இரவுகளில் அமெரிக்கர்கள் தங்கள் தாக்குதல்களை நிறுத்திவிட்டனர்,” என்று ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா கூறினார். “எங்கள் உத்தி அடிப்படையில் பதிலடி கொடுப்பதாக இருப்பதால், நாங்கள் எங்கள் பதிலடி நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம் ” என்றார்.
ஆனால், அமெரிக்கா அந்நாட்டின் மீதான தனது தாக்குதல்களை மீண்டும் தொடங்கினால், மோதல் விரிவடையும் என்று ஈரான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தது.

