வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை [12] நெல்லியடி மத்திய கல்லூரி மண்டபத்தில் கலாநிதி தம்பிஐயா கலாமணி அரங்கில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலர் திருமதி உமாமகள் மணிவண்ணன் தலமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலளர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், , சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டு அலகு பிரதி பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ், கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட செயலக சிரேஸ்ர கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரட்ணம், கந்தன் பாலன், திருமதி சிவகுரு சிவகுரு பேரின்பநாயகி, பிரதேச கலாசார பேரவை உப தலைவரும் விரிவுரையாளருமான வேல்நந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணிக்கம் சந்தப்பு [மிருதங்கம்], முருகன் சிவபாதசுந்தரம் [கூத்து] நாகமுத்து முத்துராசா [உடுக்கு], சீனியன் ஆறுமுகம் [நாடகம்] கலை ஞான வாருதி விருது வழங்கப்பட்டது.
திருமதி ஜெயபாரதி கௌசிகன் [ இசை , வாய்ப்பாட்டு ] சிவபாதராசா மோகன்ராஜ் [ இசை , வாய்ப்பாட்டு ] , சின்னராசா உதயகுமார் [இலக்கியம் ]ஆகியோருக்கு கலைவாருதி விருது வழங்கப்பட்டது. மார்க்கண்டு செல்வதால் [கவிதை, ] மதியுகநாதன் மனுசங்கர் [ஹார்மோனியம் கீபோட் ] ஆகியோருக்கு இளங்கலைர் விருது வழங்கப்பட்டது.
விக்னா இசை மன்ற கலைஞர்களின் இசைக்கச்சேரி, சதாபொன்ஸ் அஸ்விகா நடனாலய மாணவர்களின் ஒயிலாட்டம், அமிர்தவாகினி இசைமன்ற மாணவர்களின் கிராமிய பாடல்கள், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கௌத்துவம், குருசேத்திரா நடனாலய மாணவர்களின் கும்மி நடனம், கம்பர்மலை கலாபூசணம் கந்தையா விஜயரத்தினம் கலாமன்றத்தினரின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்து என்பன நடைபெற்றன.