Friday, June 27, 2025 5:28 am
மஹாவாவில் உள்ள தியபெட்டே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வியாழக்கிழமை ஒரு வாகனத்திற்குள் கண்டெடுக்கப்பட்ட எரிந்த உடல், தொழிலதிபரின் உடல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் குருணாகலை மில்லாவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த தொழிலதிபர் என்பது தெரியவந்துள்ளது.
புதன்கிழமை மாலை முடி வெட்டுவதற்காகச் சென்ற அவர் வீடு திரும்பாததால், பாதிக்கப்பட்டவரின் மனைவி டோரதியாவா பொலிஸில் புகார் அளித்தார்.
கருகிய உடலைக் கண்டுபிடித்த பிறகு, பொலிஸார் பெண்ணை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அந்த பெண் அந்த உடலை தனது கணவருடையது என்று அடையாளம் காட்டினார்.

