ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த நியமனம், 1948 ஆம் ஆண்டு பிராந்திய ராணுவ விதிமுறைகளின் பத்தி-31 இன் கீழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை ராணுவ விவகாரத் துறையின் இணைச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜி.எஸ்.சவுத்ரி வெளியிட்டார்.
வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய தடகள வீரராக பரவலாகக் கருதப்படும் 27 வயதான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் மணிமகுடங்களில் ஒன்றாக இந்த சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ரா முதன்முதலில் ஆகஸ்ட் 26, 2016 அன்று இந்திய ராணுவத்தில் நைப் சுபேதராக சேர்க்கப்பட்டார். பல ஆண்டுகளாக, அவர் பதவி உயர்வு பெற்று, 2021 இல் சுபேதராகவும், 2024 இல் சுபேதர் மேஜராகவும் ஆனார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி