நெடுந்தீவுக்கு சேவையில் இருந்த குமுதினி படகில் பயணம் சென்றவர்களைப் படுகொலை செய்த 40 வது ஆண்டு நினைவேந்தல் நேன்று வியாழக்கிழமை [15] காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும்,உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
1985ம் ஆண்டு நெடுந்தீவு மாவிலித்துறை முகத்தில் இருந்து புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி குமுதினி படகில் மக்கள் சென்ற போது கடற்படையினர் இடை மறித்து குழந்தை ,பெண்கள் ,அடங்கலாக உட்பட 36 பேரைநடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தனர்.
Trending
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பரிசுத் தொகை அறிவிப்பு
- ஐபிஎல் இல் தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி
- நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
- இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்
- இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
- கடலில் மூழ்கப்போகிறது மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவு
- விசாரணைக் குழு முன் ஆஜராகிறார் தேசபந்து தென்னகோன்
- 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை புதுப்பிக்க திட்டம்