உலக புவி நாள் நிகழ்வை கொண்டாடும் முகமாகவும் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாகவும், மட்டக்களப்பு, ஆறுமுகத்தான் குடியிருப்பு சக்தி விளையாட்டு கழக மைதானத்தில் மரம் நடுகை இடம் பெற்றது.
நிகழ்வுக்கு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுதாகரன் ஐயா மற்றும் கணக்காளர் திருமதி. ரேவதனன் அம்மணி அவர்களும் இளைஞர் சேவை அதிகாரி கிஸ்கந்தமுதலி ஐயா அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் சக்தி விளையாட்டு கழகம் மற்றும் நாவலர் இளைஞர் கழக உறுப்பினர்களும் இம்மர நடுகை திட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
உலக புவிநாளை முன்னிட்டு இம்மரக்கூடுகளுக்கான அனுசரனையை ஏகன் மீடியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.






