2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், புனிதர்களின் காரணங்களுக்கான டிகாஸ்டரி மூலம் விசுவாச சாட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித்தின் கூற்றுப்படி, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் மற்றும் கட்டுவாபிட்டியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதலில் பலியான 167 பேர் வத்திக்கானால் விசுவாச நாயகர்களாகக் கௌரவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பிரதான நினைவுச் சேவையின் போது மால்கம் கார்டினல் ரஞ்சித் இதை வெளிப்படுத்தினார்
Trending
- அரசியல் பழிவாங்கல் வேண்டாம் – ஜனாதிபதியிடம் உதயகலாவின் மகள் உருக்கம்
- அமெரிக்காவிற்காவில் இலங்கை தூதுக்குழு முக்கிய பேச்சுவார்த்தைகள்
- 167 பேரை விசுவாச நாயகர்களாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
- புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் 462 மில்லியனுக்கும் அதிகமான வருமானம்
- கிளிநொச்சியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு
- கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை சொன்னவர்கள் மீண்டும் பொய்யுடன் வருகிறார்கள்
- கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நஸிருக்கு பிரியாவிடை
- வட்டுக்கோட்டையில் சடங்கு நிலை ஆற்றுகை