கடந்த ஏழு மாதங்களில் துப்பாக்கிச் சூடு, ரயில் , வாகன மோதல், வேட்டையாடுதல், விஷம் குடித்தல் இயற்கை காரணங்களால் 198 காட்டு யானைகள் இறந்துள்ளதாக சுற்றுச்சூழல் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் நான்கு யானைகள் இறந்தன, இரண்டு யானைகள் ரயில் விபத்திலும், இரண்டு துப்பாக்கிச் சூட்டில் இறந்தன.
காயமடைந்த பதின்மூன்று யானைகள் தற்போது சிகிச்சையில் உள்ளன, அதே நேரத்தில் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.