ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கப்டன் ரியான் பராக், 2025 சீசனின் 53வது போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரியான் பராக் 13வது ஓவரில் மொயீன் அலியின் ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் விளாசினார்.
பின்னர் வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் அவர் தொடர்ந்து ஆறாவது சிக்ஸரை விளாசினார்.
ரியான் பராக்கின் அதிரடி ஆட்டம் ராஜஸ்தானை 71/5 என்ற நிலையில் பின்னடைவில் இருந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.27 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டி, 45 பந்துகளில் 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனால், தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்தார்.