ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 150 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், எஞ்சின் கோளாறு காரணமாக நேற்று இரவு சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது நடுவானில் இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானிகள் உடனடியாக கோளாறை கண்டறிந்து, விமானத்தை பாதுகாப்பாக சென்னைக்கு திருப்பிவிட்டனர். இந்த விரைவான நடவடிக்கை அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது. முழுமையான ஆய்வு , தேவையான பழுதுபார்ப்புக்கு பிறகு, பயணிகளை அவர்களின் பயணத்தை தொடர விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது. நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் அனைவரும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.