40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தை துஷ்பிரயோக விசாரணைகளை விரைவுபடுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நீதி அமைச்சுடனும், அட்டர்னி ஜெனரல் துறையுடனும் இணைந்து, இந்த முயற்சி விரைவான நீதியை உறுதி செய்வதையும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீர்ப்புகளை வழங்குவதில் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.