லீட்ஸின் ஹெடிங்லியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்திய தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் , கே.எல்.ராகுல் ஆகியோர் அந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய தொடக்க ஜோடி என்ற புதிய சாதனையை படைத்தனர்.ஜெய்ஸ்வால்41,ஓட்டங்களும்,ராகுல்42 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த ஜோடி 91 ஓட்டங்கள் எடுத்தது.
முன்னதாக, 1986 ஆம் ஆண்டு ஹெடிங்லியில் இந்தியாவின் வரலாற்று வெற்றியின் போது சுனில் கவாஸ்கர் , கிறிஸ் ஸ்ரீகாந்த் அமைத்த 64 ஓட்டங்களை இந்த ஜோடி முறியடித்தது.
ஹெடிங்லியில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு இந்திய தொடக்க ஜோடி 50 ஓட்டங்களைக் கடந்தது இது இரண்டாவது முறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் எந்தவொரு வெளிநாட்டு அணியும் இந்த மைதானத்தில் 12 ஆண்டுகாலக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை கூட்டாக குவிக்க முடியாமல் இருந்த நிலையில், அதையும் இதன் மூலம் முறியடித்துள்ளனர்.
கடைசியாக நியூசிலாந்தின் பீட்டர் ஃபுல்டன் , ஹமிஷ் ரூதர்ஃபோர்டு ஜோடி 2013 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் 55 ஓட்டங்கள் சேர்த்தது.