மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக ரி20 போட்டிகளில் விளையாடிய வீரரும், அதிக ஓட்டங்கள் எடுத்த வீரருமான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிக்கோலஸ் பூரன் ரி20 கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ரி20 வடிவத்தில் அதிக சிக்ஸர்கள் (170) அடித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு சீசனில் முதல் முறையாக 500 ஓட்டங்களுக்கு மேல் அடித்தார் 40 சிக்ஸர்களை அடித்தார் – இந்த ஆண்டு போட்டியில் அதிகபட்சம்.