முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டுப் பயணங்களுக்காக மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய் செலவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று வியாழக்கிழமை (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் 4 வெளிநாட்டுப் பயணங்களையும், 2023 இல் 14 வெளிநாட்டுப் பயணங்களையும், 2024 இல் 5 வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டார்.
2022 ஆம் ஆண்டில் 63 அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களில் பங்கேற்றதாகவும், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 252 அதிகாரிகள் பங்கேற்றதாகவும், 2024 ஆம் ஆண்டில் 111 அதிகாரிகள் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளாத, ஆனால் அரச அதிகாரிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட 19 வெளிநாட்டு விஜயங்களுக்கு மொத்தம் ரூ.19.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.