உலகின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு பெற விரும்பும் வேட்பாளர்கள் பட்டியலில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டில் பரிசு பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
” , இந்த ஆண்டு ட்ரம்ப் இருக்க மாட்டார்,” என சுவீடிஷ் பேராசிரியரும் சர்வதேச விவகார நிபுணருமான பீட்டர் வாலன்ஸ்டீன் கூறியுள்ளார்.
ஆனால், காஸா நெருக்கடியில் அவரது முயற்சிகள் உள்ளிட்ட சூழ்நிலைகள் தெளிவடையும்போது, அடுத்த ஆண்டு வாய்ப்பு அமையலாம் என்றும் அவர் சொன்னார்.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நபர் குறித்து வெள்ளிக்கிழமை(அக். 10) நார்வேயின் ஓஸ்லோவில் உள்ள நோபல் குழு காலை 11 மணிக்கு(IST 2:30 PM) அறிவிக்கவுள்ளது.
அமைதி விருதுக்காக இந்த ஆண்டு மொத்தம் 338 பேருடன், சில அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக விருது பட்டியல் வெளியாகும் வரை இரகசியமாக வைக்கப்படும் நிலையில், தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலை மிகவும் கடுமையானதாக இருக்கிறது.
இந்த விருதுக்கான முன்னிலை பட்டியலில், சூடான் அவசர பதிலளிப்பு குழு – போர் மற்றும் பஞ்சத்தின் மத்தியில் தன்னார்வலர்கள் செய்யும் சேவைக்காக; யூலியா நவல்னயா – ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் மனைவி; மனித உரிமைகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் – OSCE, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், Reporters Without Borders போன்ற பத்திரிகை பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை உள்ளன.
ட்ரம்பை பல தலைவர்கள் மற்றும் சட்டமியற்றுபவர்கள் பரிந்துரைத்துள்ளனர்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
பாகிஸ்தானின் இராணுவத் தலைவர் பீல்ட் மார்ஷல் அசிம் முனீர்
கம்போடிய பிரதமர் ஹன் மானெட்
அமெரிக்க காங்கிரஸ்காரர் பட்டி கார்ட்டர்
ஸ்வீடன் மற்றும் நோர்வேயைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
இருப்பினும், ஒரு முக்கியமான நிபந்தனையை இந்த பரிந்துரைப்புகள் பூர்த்தி செய்யவில்லை.
இந்த ஆண்டு பரிசுக்கு தகுதி பெற அனைத்து பரிந்துரைகளும் பிப்ரவரி 1, 2025 க்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நோபல் குழு கோரி இருந்தது.
ஆனால் நெதன்யாகு மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தால் செய்யப்பட்ட பரிந்துரைகள் இந்த காலக்கெடுவுக்குப் பிறகு வந்தன, இதனால் அவர்களின் பரிந்துரை ஏற்கப்படாது.