அமெரிக்கத் தலைமையிலான படைகளினால் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட 57 வயதான கான் முகமது விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளார். அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறைவாசம் அனுபவித்த லட்சக்கணக்கான ஆப்கானியர்களைப் கான் முகமதுவும் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கசப்பான நினைவுகளைச் சுமந்து செல்கிறார்.
“நான் கைது செய்யப்பட்டபோது என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்தனர். நான் விடுதலையாகி வீடு திரும்பிய பிறகு, மூத்தவர் முதல் இளையவர் வரை ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் வரை அவர்களில் யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை,” என்று 10 பேர் கொண்ட குடும்பத்தின் தலைவரான கான், கூறினார்.
ஹாதியா கில் என்ற தொலைதூர கிராமத்தில் தரிசு மற்றும் பாழடைந்த தோட்டத்திற்கு மத்தியில் மண் செங்கல் வீட்டில் வசித்து வந்த முன்னாள் கைதி, தற்போது சுதந்திரக் க்சாற்றை சுவாசிக்கிறார்.
ஜலாலாபாத் விமான நிலையத்தைத் தாக்கி பல அமெரிக்கர்களைக் கொல்ல ஒரு பெரிய சதித்திட்டத்தை திட்டமிட்டதாக கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு நங்கர்ஹார் மாகாண தலைநகரான ஜலாலாபாத்தில் இருந்து அமெரிக்க துருப்புக்களால் கைது செய்யப்பட்ட அவருக்கு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனவரி மாதம், அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்திற்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார்.
Trending
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு