ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும் ஒரே விமானத்தில் மாலைதீவுக்குச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அரசு முறைப் பயணமாக மாலைதீவுகுச் சென்றவிமானத்தில் நாமல் ராஜபக்ஷவும் திருமண விழாவில் கலந்து கொள்ள பயணம் செய்தார். அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து மாலைத்தீவுக்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 101 இன் வணிக வகுப்பில் இருந்தனர்.
அதேவேளை இன்று அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறிய நாமலுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது,
நாமல் ராஜபக்ஷ இன்று தினம் காலை வெளிநாடு சென்றுள்ளதால் நாளை (29) தனது பிடியாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்து நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.