ஹெடிங்லியில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் 23 வயதான சாய் சுதர்சன் தனது அறிமுக இன்னிங்ஸிலேயே டக்-அவுட் ஆனார்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது தொடக்கம் ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும், இதன் மூலம், அவர் 15 ஆண்டுகளில் அறிமுக டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் ஆன முதல் இந்திய வீரர் ஆனார்.
கடைசியாக 2010-ல் நாக்பூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரித்திமான் சஹா டக்கவுட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மனோகர் ஹர்திகர், குண்டப்பா விஸ்வநாத், தேவாங் காந்தி, கிறிஸ் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட அறிமுகப் போட்டியிலேயே டக்கவுட் ஆன இந்திய பேட்ஸ்மேன்களின் அரிய பட்டியலில் இப்போது அவர் இணைந்துள்ளார்.