கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் அலுவலக உதவியாளர்
11,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 28 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம், அந்த தண்டனையை 7 ஆண்டுகளில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளது. , பிரதிவாதிக்கு 31,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாகவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமன் தீர்ப்பை அறிவிக்கும் போது தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 சிசிடிவி கேமரா பெட்டிகளை வரி செலுத்தாமல் விடுவிப்பதற்காக தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 11,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பாக, பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 2016 செப்டம்பர் 19ஆம் திகதியன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தீர்ப்பை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, பிரதிவாதிக்கு மேற்படி தண்டனைகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Trending
- பொசன் யாத்ரீகர்களுக்கான இலவச சிறப்பு ரயில்கள்
- காத்தான்குடியில் அதிகளவில் ஹெல்மெட் விதி மீறல்கள்
- 1,200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- ஆற்றில் மூழ்கி நான்கு பேர் பலி!
- சீமெந்து விலை அதிகரிப்பு
- திருடப்பட்ட 170 சைக்கிள்களுடன் சந்தேக நபர் கைது!
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது