இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6, ஆம் திகதி அமெரிக்க குண்டுவீச்சு விமானியான எனோலா கே, யுரேனியம் குண்டைஹிரோஷிமா நகரத்தின் மீது வீசி வெடிக்கச் செய்த நாள் இன்றாகும். அணுகுண்டின் தாக்கத்தால் ஆண்டு இறுதிக்குள் 140,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. ஹிரோஷிமாவில் சரியான நேரம் காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
போரில் அணு ஆயுத அழிவின் கொடூரத்தை அனுபவித்த ஒரே நாடு என்ற வகையில், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்குவதற்கான உலகளாவிய முயற்சிகளை முன்னெடுப்பதே ஜப்பானின் நோக்கம் என்று பிரதமர் ஷிகெரு இஷிபா கூறினார்.
சுமார் 55,000 பேர் கலந்து கொண்ட இந்த விழாவில், அணு ஆயுதங்களுக்கு எதிராக உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களைப் பயன்படுத்தி பல தசாப்தங்களாக நடத்திய பிரச்சாரத்திற்காக, ஜப்பான் A- , H-வெடிகுண்டு பாதிக்கப்பட்ட அமைப்புகளின் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படும் நிஹோன் ஹிடான்கியோவுக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.