பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை பங்களாதேஷ் நீதிமன்றம் விதித்ததாக உள்ளூர் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
டாக்கா ட்ரிப்யூனின் கூற்றுப்படி, ஹசீனாவுக்கான தண்டனையின் அளவை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் தலைவர் நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு முடிவு செய்தது.ஹசீனாவின் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த நாளிலிருந்து அமுலுக்கு வரும்.
ஹசீனாவுடன் சேர்ந்து, அதே அவமதிப்பு தீர்ப்பின் கீழ், கைபந்தாவில் உள்ள கோபிந்தகஞ்சைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்புலுக்கும் இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
டாக்காவைச் சேர்ந்த ஒரு அரசியல் பிரமுகர் புல்புல் , அவாமி லீக்கின் மாணவர் பிரிவான பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) உடன் தொடர்புடையவர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் ஷகில் அகந்த் புல்புலுடன் ஷேக் ஹசீனா செய்ததாகக் கூறப்படும் ஒரு கசிந்த தொலைபேசி அழைப்பை மையமாகக் கொண்டு ஷேக் ஹசீனா மீதான அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி, ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.
அவரது முன்னாள் அமைச்சர்கள் , மூத்த அதிகாரிகள் பலர் இப்போது எழுச்சியுடன் ஏற்பட்ட கொடிய ஒடுக்குமுறை தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர்.