தபால் முத்திரை வருமானம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் முத்திரைக் கட்டணத்தை மீளாய்வு செய்வதற்கான முன்மொழிவை தபால் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
மின்சாரம், நீர், எரிபொருள், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்ட ஏனைய செலவினங்கள் காரணமாகவும்,புதிய தொழில்நுட்பதாலும் தபால் திணைக்களத்தின் வருமானம் குறைந்துள்ளதனால் இந்த யோசனை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தின் கடிதங்களை வழங்குவதற்கு பொது போக்குவரத்து பயன்படுத்தப்படுவதாகவும், கடந்த காலங்களில் புகையிரத போக்குவரத்து கட்டணங்களும் சுமார் 600% அதிகரித்துள்ளதாக தபால் மா அதிபர்தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக தற்போது கூரியர் சேவை முறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Trending
- அண்ணாமலைக்கு செருப்பு கொடுத்த நயினார் நாகேந்திரன்
- திட்டமிட்டவாறு தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
- பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை தவிர்க்க அறிவிறுத்தல்
- தொழிலாளர்களின் பணவரவில் சாதனை படைத்த மார்ச்
- உலகளாவிய பாஸ்போர்ட் குறியீட்டில் இலங்கை முன்னேறியுள்ளது
- ஏகபாதாசனம்
- உலகின் மூத்தகொரில்லாவின் பிறந்தநாள்
- பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை எனத் தெரியும் – பிரதமர்