பாடசாலை விடுமுறை, ஸ்ரீ பாத யாத்திரை ஆகியவற்றை முன்னிட்டு நாளை புதன்கிழமை (12) முதல் கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசன்துறை வரையான மார்கத்தில் நான்கு சிறப்பு இரயில்களை இயக்க இலங்கை இரயில்வே திட்டமிட்டுள்ளது.
முதல் ரயில் மார்ச் 12, 14, 16, 21, 23, 28 , 31 ஆகிய திகதிகளில் இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புறப்படும். இரண்டாவது ரயில் மார்ச் 12, 14, 16, 21, 23, 28 , 31 ஆகிய திகதிகளில் மாலை 5.20 மணிக்கு பதுளையிலிருந்து புறப்படும்.
மூன்றாவது இரயில் மார்ச் 13 முதல் 31 வரை தினமும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசந்துறைக்குப் புறப்படும். நான்காவது இரயில் மார்ச் 13 முதல் 31 வரை தினமும் பிற்பகல் 1.50 மணிக்கு காங்கேசந்துறையி இருந்து புறப்படும்.