கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து 1 மில்லியன் ரூபா வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொத்மலை, கரடிஎல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை ஏற்பட்ட துயரகரமான பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் ஜனாதிபதி நிதியிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிதியை இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த உதவிக்கு கூடுதலாக, இலங்கை போக்குவரத்துசபை, தொடர்புடைய காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.