பருத்தித்துறை நகரசபைக்கு உட்பட்ட சாப்பாட்டுக் கடைகளில் லஞ்சீற் உட்பட பொலீத்தீன் பயன்பாட்டை கட்டுப்படுத்திவது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகரசபை தலைவர் வின்சன்டீபோல் டக்ளஸ் போல் தலமையில் நகர வர்தகர்களுடன் இடம் பெற்ற கூட்டத்திலேயே எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து சாப்பாட்டுக் கடைகளில் பொலித்தீன் பயன்படுத்துவதில்லையென்றும், அதற்கு பதிலாக வாழை இலையைப் பயன்படுத்துவதெனவும், அதேவேளை பொலித்தீன் பயன்பாட்டை முற்றுமுழுதாக நிறுத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.