இந்திய கிறிக்கெற் அணியின் மூத்த வீரர் விராட் கோலி, ரி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக களமிறங்கிய விராட் கோலி தனது 17வது ஓட்டத்தை எடுத்தபோது இந்த மைல்கல்லை எட்டினார்.
இதன் மூலம், உலகளவில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்கள் அடித்தவர்களின் எலைட் பட்டியலில் கோலி இணைகிறார்.
ஒட்டுமொத்தமாக உலகவில் ரி20 கிரிக்கெட்டில் 13,000 ஓட்டங்களை எட்டிய ஐந்தாவது பேட்ஸ்மேன் ஆனார்.
கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), ஷோயப் மாலிக் (13,557), , கீரன் பொல்லார்ட் (13,537) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு ரி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
ஐபிஎல்லில் 8,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் 256 போட்டிகளிலும் ஆர்சிபி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், எட்டு சதங்களையும் அடித்துள்ளார்.