Saturday, February 21, 2026 1:43 pm
ரி20 உலகக்கிண்ணப் போட்டிகள் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெறுகின்றன. இந்தத் தொடரில் பல சாதனைகள் நிலை நாட்டப்பட்டுள்ளன. அதே வேளை மிகவும் எதிர் பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
ஹர்டிக் பாண்டியாவின் அசத்தல் சாதனை
இந்திய கிறிக்கெற் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியதன் மூலம் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா 21 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்கள் அடித்தார். பந்துவீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவர் இந்த போட்டியில் அடித்த 30 ஓட்டங் கள் மூலம் ஆறாவது சர்வதேச வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை ரி20 கிறிக்கெற் போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக ரி 20 கிறிக்கெற் போட்டிகளில் 6000+ ஓட்டங் , 200+ விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரராக அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே சர்வதேச அளவில் கைரன் பொலார்ட், ஆண்ட்ரே ரசல், ஷாகிப் அல் ஹசன், முகமது நபி, டுவைன் பிராவோ ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த வேளையில் ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியா இந்த சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங்கின் சாதனையை சமன் செய்த வருண் சக்கரவர்த்தி
சர்வதேச ரி20 கிறிக்கெற் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 14 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்த போட்டியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்கின்றனர். – ஆனால் வருண் சக்கரவர்த்தியை கட்டுக்கோப்புடன் பந்துவீசி வருகிறார். இந்நிலையில் நேற்று பெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கின் சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் கடந்த ஜூன் 2024 முதல் டிசம்பர் 2025 ஆம் திகதி வரை இந்திய அணிக்காக விளையாடிய 17 ஆட்டங்களில் தொடர்ந்து அனைத்து போட்டியிலும் குறைந்தது ஒரு விக்கெட்டையாவது வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை தற்போது வருண் சக்கரவர்த்தியும் சமன் செய்துள்ளார். –
கடந்த 2025 செப்டம்பர் மாதத்திற்கு பிறகு வருண் சக்கரவர்த்தி விளையாடிய 17 ஆட்டங்களில் அனைத்து போட்டியிலுமே குறைந்தது ஒரு விக்கெட்டையாவது கைப்பற்றியுள்ளார். கடைசியாக நடைபெற்ற 17 போட்டிகளிலும் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தியுள்ள அவர் அடுத்த போட்டியிலும் விக்கெட் எடுக்கும் பட்சத்தில் அர்ஷ்தீப் சிங்கின் அந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது.
டக் அவுட்டில் ஹட்ரிக் அபிஷேக் சர்மா வேதனை
குரூப் ஏ சுற்றில் இந்திய அணி இன்று ஸ்கொட்லாந்து அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து, ஆட்டத்தை அபிஷேக் சர்மா – இஷான்கிஷன் தொடங்கினார். இந்த தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலுமே டக் அவுட்டாகிய அபிஷேக் சர்மா இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆர்யன் தத் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்திலே போல்டானார்.
இதன்மூலம், இந்த ரி20 உலகக் கிண்ணத்தில் அபிஷேக் சர்மா தான் ஆடிய 3 போட்டிகளிலுமே டக் அவுட்டாகியுள்ளார். இந்த தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா ஹட்ரிக் டக் அவுட்டாகியிருப்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.அபிஷேக் சர்மா கடைசியாக ஆடிய 9 ஆட்டங்களில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதே நிலையில் இவர் நீடித்தால் அணியில் தொடர்ந்து நீடிப்பது சவாலாக மாறிவிடும்.
ஒரே ஆண்டில் ரி20 போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற பட்டியலில் அபிஷேக் சர்மா 2வது இடத்தில் உள்ளார். அவர் இந்தாண்டு மட்டும் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். முதலிடத்தில் சையும் அயூப் 6 முறை அவுட்டாகி முதலிடத்தில் உள்ளார். 2வது இடத்தில் சலோம்வாங், குஷல் புர்டல், தர்மகேசுமா, பர்வேஸ் ஹொசைன் ஆகியோருடன் அபிஷேக் சர்மாவும் உள்ளார்
பாகிஸ்தான் வீரர் பர்ஹான் சதத்தில் சாதனை
நமீபியாவுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் புதிய சாதனையை நிலை நாட்டி உள்ளார்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய சாஹிப்சாதா ஃபார்ஹான் 58 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 4 சிக்ஸர் என 100 ஓட்டங் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் இரண்டாவது பாகிஸ்தான் வீரராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
ரி20 உலக கிண்ண வரலாற்றில் சதமடித்த ஒரே ஒரு பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அகமது செஷாத் தன்வசம் வைத்திருந்தார். அவருக்கு அடுத்து தற்போது ஃபர்ஹான் இந்த போட்டியில் அடித்த சதம் மூலம் உலகக் கிண்ண ரி20 ஆட்டத்தில் சதம் அடித்த இரண்டாவது பாகிஸ்தான் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச ரி20 உலகக் கிண்ணத்தில் சதமடித்த ஆறாவது ஆசிய வீரராகவும் இவர் தனது பெயரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2026 ஆம் ஆண்டு ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியை சேர்ந்த பதும் நிசங்க, கனடா அணியை சேர்ந்த யுவ்ராஜ் சாம்ரா ஆகியோரும் சதமடித்துள்ளனர்.
கிறிக்கெற்,ரி20,உலகக்கிண்ணம், விளையாட்டு,இந்தியா,பாகிஸ்தான்,சாதனை,

