மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் மும்பை அணி துடுப்பெடுத்தாடியது.செய்தது. சேஸிங் செய்த லக்னோ 20 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், முதலில் பந்துவீசிய லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது இரண்டாவது முறை என்பதால் ரிஷப் பந்துக்கு 24இலட்சம் ரூபாவும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு 6இலட்சம் போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.