ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் திங்களன்று நாட்டின் ஆயுதப் படைகளுக்கு 2026 முதல் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள், தொடர்புடைய உபகரணங்களை வாங்குவதைத் தடை செய்யும் ஆணையில் கையெழுத்திட்டார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கான அனைத்து சீருடைகள் ,பிற ஆடைப் பொருட்களையும், நாட்டிற்குள் உற்பத்தி வசதிகளைக் கொண்ட ரஷ்ய நிறுவனங்களே தயாரிக்க வேண்டும்.2027 ஆம் ஆண்டளவில், இந்தத் தேவை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் துணிகள் ,பின்னலாடைப் பொருட்களுக்கும் நீட்டிக்கப்படும், அவை உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்.
இராணுவத்தின் தேவைகளுக்காக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதை முற்றிலுமாக விலக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.
இராணுவ உடைகள் , உபகரணங்களில் சீருடைகள், சின்னங்கள், உள்ளாடைகள், படுக்கை, சிறப்பு ஆடைகள், காலணிகள், உபகரணங்கள், சுகாதாரப் பொருட்கள் ஆகியவை அடங்கும். இத்தகைய பொருட்கள் ரஷ்ய அரசு பாதுகாப்பு உத்தரவு அமைப்பு மூலம் வாங்கப்படுகின்றன.
Trending
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு
- ChatGPT க்கு போட்டியாக களமிறங்கிய இந்திய செயலி
- அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை