2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என்றும் அவர்களின் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் இணைந்த தமிழ் இளைஞர்களுக்கு என்ன நடந்தது எனவும் அவர்கள் இருக்கின்றார்களா இல்லையா? என்பது தொடர்பில் தகவலை வெளியிட சிறிதரன் எம்.பி கேள்வி எழுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Trending
- அரசவங்கி ஊழியர்களின் ஒன்றினைந்த தொழிற்சங்கம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
- சமூக செயற்பாட்டாளர் கேரள கஞ்சாவுடன் கைது
- 62ஆயிரம் இளைஞர்கள் அரச சேவையில் இணைப்பு
- நேபாளத்திலுள்ள 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறும் வாய்ப்பு
- எரிபொருளுக்கான வரியை நீக்க முடியாது : வலுசக்தி அமைச்சர்
- மீகொட துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பலி
- பிரியந்த வீரசூரியவை ஐஜிபியாக அங்கீகரித்தது அரசியலமைப்பு சபை
- அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிப்பு