முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் நேற்று வியாழக்கிழமை (13) கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமல் லன்சா, ராஜித சேனாரத்ன, ருவான் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்ரினர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
கலந்திரயாடல் பற்றி கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன,
“கலந்துரையாடல் பிரயோசனமாக இருந்தது. . ஐக்கிய மக்கள் சக்தியினை சேர்ந்த எரும் கலந்து கொள்ளவில்லை. எதிர்காலத்தில் அவர்களும் விவாதங்களில் இணைவார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றாகப் போட்டியிடுவதா அல்லது தனித்தனியாகப் போட்டியிடுவதா என்பதை விரைவில் நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கும்” என்றார்.
நிமல் லன்சா கருத்துத் தெரிவிக்கையில்,
“ கலந்துரையாடலில் விஷேசம் எதுவும் இல்லை. அது ஒரு நட்புரீதியான சந்திப். அழைக்கப்பட்டதால் நாங்கள் கலந்துகொண்டோம்” என்றார்.