ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் வாக்குமூலம் அளிக்க ஆஜரானால், அவரை கட்டாயமாக விளக்க மறியலில் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்த யூடியூபர் சுதாவின் அறிக்கையை மக்கள் ஐக்கியசக்தி உறுப்பினரும் வழக்கறிஞருமான லிஹினி பெர்னாண்டோ கடுமையாகக் கண்டித்துள்ளார்.
விக்கிரமசிங்கவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 14 நாட்கள் ரிமாண்ட் காவலில் வைக்க வேண்டும் அன்று பிரபல யூரியூபர் சுதா, கூறியிருந்தார், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தனது யூரிரிப்பை உறுதியளித்தார். இது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று வலியுறுத்தினார்.
“இத்தகைய கருத்துக்கள் நீதியின் கொள்கைகளை வெளிப்படையாக புறக்கணிப்பதைக் காட்டுவது மட்டுமல்லாமல், நீதித்துறை முடிவுகளை தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது அரசியல் சதிகளால் கட்டளையிட முடியும் என்று பொதுமக்களை தவறாக வழிநடத்தவும் முயல்கின்றன,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.