கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.கனடா பிரதமரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதை உறுதிப்படுத்தினார்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் பிரச்சனைகள் காரணமாக ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள மோடிக்கு அழைப்பு விடப்படவில்லை என செய்தி வெளியாகியது.
கனடாவின் கூட்டாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மோடியும் கார்னியும் பதவியேற்ற பிறகு, அவர்களுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும்.
கடந்த மாதம், வெளியுறவு அமைச்சகம் இரண்டு சந்தர்ப்பங்களில், பிரதமர் மோடி G7 உச்சிமாநாட்டிற்காக கனடாவுக்குச் சென்றது குறித்து “எந்த தகவலும் இல்லை” என்று கூறியது.
G7 என்பது உலகின் மிகவும் தொழில்மயமான பொருளாதாரங்களைக் கொண்ட பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இங்கிலாந்து , ஜப்பான், அமெரிக்கா , கனடா ஆகிய நாடுகளின் முறைசாரா குழுவாகும்.
இதில் ஐரோப்பிய ஒன்றியம், IMF, உலக வங்கி , ஐக்கிய நாடுகள் சபை ஆகியனவும் ம் கலந்துகொள்ள உள்ளன.