நாக்பூர் மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை [6] இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெற்களையும் இழந்து 47 ஓவர்களில் 248 ஓட்டங்கள் எடுத்தது. கப்டன் ஜாஸ் பட்லர் 51 ஓட்டங்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய தரப்பில், ஜடேஜா அறிமுக வீரர் ரானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
249 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தடிய இந்தியா 38 ஓவர்களில் 6 விக்கெஏகளை இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது கப்டன் ரோகித் சர்மா 2 ஜெய்ஸ்வால் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் அபாரமாக விளையாடி 87 ஓட்டங்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 59 , அக்சர் பட்டேல் 52 ஓட்டங்கள் அடித்தனர்.
சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். , இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் வரும் 9ம் திகதி நடைபெற உள்ளது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!